Sunday, June 6, 2010

சூரியன் நாளை முதல் மேற்கில் உதிக்கும்

மீடியா எனப்படும் செய்தி தொடர்புத்துறைக்கு எனது வேண்டுகோளாக இதைப்பதிவு செய்கிறேன்.
உலகில் நடக்கும் ஒவ்வொரு விஷயமும் நமக்கு செய்தி தொடர்பு துறை வழியாகத்தான் கிடைக்கிறது. "ஆங்கோர் அநியாயம் நடந்தது" என்பதை நாம் கண்கூடாக நேரடியாக பார்ப்பதில்லை. பத்திரிக்கையிலோ அல்லது தொலைக்காட்சி, வானொலி செய்திகளின் மூலமாகவே அறிந்துகொள்கிறோம். நம் நண்பர் சொல்லி கூட நம்பாத ஒன்றை பத்திரிகை செய்திகள் கூறினால் உடனே நம்பிவிடுகிறோம். "சூரியன் நாளை முதல் மேற்கில் உதிக்கும்" என்று பத்திரிகையில் செய்தி வந்தால் என்ன, ஏது, எப்படி என்று கூட ஆராயாமல் அடுத்தநாள் மேற்கில் இருந்து உதிக்கப்போகும் சூரியனை பார்க்க குடும்பத்தோடு மொட்டை மாடியில் அதிகாலையிலே காத்திருக்கும் ஆட்கள் தான் நாம். அப்படி நம் அறிவுக்குள் ஒன்றிப்போன செய்தித்துறை அதன் கடமையைச் சரியாக செய்கின்றதா என்பது கேள்விக்குறி தான். ஒரு சில செய்தி நிறுவனங்கள் தங்கள் கடமையைச் செவ்வனே செய்தி வருகிறதென்பதும் மறுப்பதற்கில்லை. கடமையைச்சரியாக செய்யும் செய்தி நிறுவனங்களுக்கு நன்றி தெரிவிக்கும் அதே நேரத்தில் வெறும் வியாபார நோக்கத்திற்காகவே செய்தி நிறுவனங்களை நடத்தி வருபவர்களை கண்டிக்க வேண்டியதும் நமது கடமையாக இருக்கிறது. பெரும்பாலான செய்தி நிறுவனங்கள் வியாபாரம் கருதியே செய்திகளை வெளியிடுகின்றன. தற்போது உள்ள சூழலில் எந்த செய்தியை வெளியிட்டால் நிறைய லாபம் கிடைக்கும் என்று மட்டுமே சிந்திப்பவர்களாக நிறுவன தலைமை அலுவலர்கள்  இருக்கின்றார்கள். உயர்மட்டத்தில் உள்ளவர்கள் செய்யும் அநியாய அக்கிரமங்களை வெளியிடும் செய்தி நிறுவனங்கள் சில நாட்கள் கழித்து அப்போதைக்கு எந்த செய்தியை வெளியிட்டால் அதிக லாபம் கிடைக்குமோ அது போன்ற செய்திகளுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கின்றனர். சில காலம் கழித்து முன்பு வெளியிட்ட அந்த அக்கிரமத்தை பற்றிய செய்தியே வராமல் போய்விடுகின்றது. உதாரணமாக லலித் மோடி, நித்தியானந்தா, ஈழத்தில் தமிழர்களின் நிலை, கேத்தன் தேசாய் போன்ற விவகாரங்களை ஒரு வாரமோ பத்து நாளோ முக்கியச்செய்தியாக வெளியிடுவார்கள். அதன் பிறகு அது என்னவாயிற்று என்று கூட தெரியாது. செய்தித்துறையின் மூலம் மக்கள் அனைத்து நடவடிக்கைகளையும் கவனித்துக்கொண்டிருக்கின்றார்கள் என்ற எண்ணம் ஏற்பட வேண்டுமானால் ஒரு விவகாரம் எழுந்தால் அது முழுமையாக முடியும் வரை செய்தித்துறை அந்த விவகாரத்தை துரத்திக்கொண்டே இருக்கவேண்டும். செய்தித்துறையின் பார்வை விலகாதவரை அந்த விவகாரங்கள் அரசியல் குறுக்கீடு இல்லாமல் ஓரளவு நேர்மையாக நடத்தப்படும். எனவே வியாபாரத்திற்காக மட்டும் இல்லாமல் மக்களின் தேவையை உணர்ந்து மக்களின் தோழனாக செய்தித்துறை பணியாற்ற வேண்டும் என்பதே அனைவரின் ஆசையாக உள்ளது.

Thursday, June 3, 2010

ஒழிக்க முடியாத(?) லஞ்சம்

லஞ்சம் என்பது இப்போது தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகிவிட்டது என்பது மறுக்க முடியாத உண்மை. அதிகாலை மார்க்கெட் பகுதியில் போலீசாரால் வியாபாரிகளிடம் வாங்கப்படும் லஞ்சத்தை, ஒவ்வொரு சாலை சிக்னலிலும் இருசக்கர வாகன ஓட்டிகளிடம் வாங்கப்படும் லஞ்சத்தை, லஞ்சம் வாங்கிக்கொண்டபிறகு தான் புகாரை பதிவு செய்யும் காவல் நிலையங்களை, அரசு அலுவலகங்களில் வாங்கப்படும் லஞ்சத்தை, லஞ்சம் வாங்கிக்கொண்டு தீர்ப்பை எழுதும் நீதிபதிகளை(!), அரசியல்வாதிகள் வாங்கும் லஞ்சத்தை இது வரை எந்த ஒரு லஞ்ச ஒழிபபுத்துறையினரும் காணவில்லையா? லஞ்சத்தை முழுவதுமாக ஒழிக்க முதலில் சிறிய அதிகாரிகளிடம் இருந்து ஒடுக்க வேண்டுமா அல்லது உயர்மட்டத்தில் இருந்து ஒழிக்க ஆரம்பிக்க வேண்டுமா என்று அனைவரும் யோசித்துக்கொண்டிருக்கின்ற நேரத்தில் லஞ்சமாக வாங்கும் பணம் அதிகரித்துக்கொண்டு தானே இருக்கின்றது. சாமானியரால் என்ன செய்ய முடியும்? இது தான் நம் கேள்வியாக இருக்கின்றது. லஞ்சம் கொடுக்க மாட்டேன் என்று ஒரு முறையாவது சொல்லி இருக்கிறோமா அல்லது லஞ்சத்தை பற்றி லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகாராவது தெரிவித்து இருப்போமா? நம் சுயநலத்திற்காக நாம் நலமாக இருந்தால் போதும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் நம்முடைய வாரிசுகளுக்கு நாம் எப்படிப்பட்ட உலகத்தை விட்டு செல்கிறோம் என்று எண்ணுபவர்களுக்கு என்னுடைய கருத்தும் புரியும்.

இடி மழை மின்னல்!

மின்னலின் தாக்கங்கள் பற்றி சமீபத்தில் ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றை பார்த்தேன். பல பயனுள்ள தகவல்களை அதன் மூலம் அறிந்து கொண்டேன். "இடி விழுந்து இறந்து போய்டான்" என்று கேள்விப்பட்டிருப்போம். ஆனால் உண்மையில் அது மின்னல் விழுந்து இறந்ததை தான் அப்படி சொல்கிறார்கள் நம் மக்கள். மின்னல் தாக்கி ஏற்படும் இறப்பை தவிர்க்க முடியாது என்று நாம் எண்ணுகிறோம். ஆனால் எந்த ஒரு அழிவு இயற்கையினால் வருவதற்கு முன்பும் இயற்க்கை ஒரு எச்சரிக்கை செய்கிறது. நமக்கு தான் அது புரிவதில்லை. மின்னல் வருவதற்கு முன்பும் ஒரு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. இதைப்பற்றி தான் அந்த தொலைகாட்சியில் அந்த நிகழ்ச்சி இருந்தது. அதில் வழங்கப்பட்ட தகவல்களை இங்கு உங்களுக்கு தருகிறேன். மின்னல் தாக்கவிருக்கும் இடத்தில் நாம் இருந்தால் மின்னல் தாக்குவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பு நம்முடைய கைகளில் இருக்கும் முடிகள் நேராக எழுந்து நிற்க ஆரம்பிக்கும். அப்படி ஒரு உணர்வு ஏற்பட்டால் அந்த இடத்தை விட்டு உடனே அகல வேண்டும். அப்படிப்பட்ட இடத்தில் கூட்டமாக இருப்பதையும் தவிர்க்கவேண்டும். மின்னல் நமக்கு அருகில் தாக்கும் பட்சத்தில் தரையோடு தரையாக உட்கார்ந்து விடுவது நல்லது. உட்காரும்போது இரு கைகளும் காதுகளை மூடியவாறு இருக்க வேண்டும். கண்களை மூடிக்கொள்ள வேண்டும். பாதத்தின் முன் பகுதி மட்டும் தரையில் படுவது போல உட்கார வேண்டும். மார்புப்பகுதி காலோடு ஒட்டி இருக்க வேண்டும். அதாவது நம் உடலை எவ்வளவு சுருக்க முடியுமோ அவ்வளவு சுருக்கி வைத்துக்கொள்ள வேண்டும். ஒருவரை மின்னல் தாக்கி இருந்தால் அவருக்கு உடனடியாக செயற்கை சுவாசம் கொடுத்தால் அவர் உயிர் பிழைக்க வாய்ப்பு உள்ளது.

Monday, May 31, 2010

மின் வெட்டுக்கு நன்றி!

மின் வெட்டு!

இது கடந்த ஒரு ஆண்டாகவே அனைத்து தரப்பு மக்களையும் அதிருப்தி அடையச்செய்த ஒரு விஷயம். மின்சாரம் என்பது நமக்கு அவ்வளவு இன்றியமையாதது ஆகிவிட்டது. சென்ற வாரம் ஒரு குடிசை வீட்டிற்கு செல்லும் வாய்ப்பு ஏற்பட்டது. நம்முடைய ஒரு படுக்கை அறையின் அளவு கூட இருக்காது அவர்களது மொத்த வீட்டின் அளவு. அந்த சிறிய இடத்திற்குள் தான் தூங்குவது, சமையல் அறை, உடை மாற்றும் அறை, பூஜை அறை, இன்னும் பல. குடிசைக்கு உள்ளே இருந்தே வானத்தை பார்க்கும் அளவிற்கு மேலே ஆங்காங்கே ஓட்டைகள். அரசாங்கத்தின் புண்ணியத்தில் இலவச மின்சாரம் கிடைத்த அந்த வீட்டில் ஒரு பல்பு மட்டும் தன்னால் முடிந்த அளவு வெளிச்சத்தை கக்கிக்கொண்டிருந்தது. ஆனால் இலவச மின்சாரம் கிடைகாததர்க்கு முன்னால் காத்து புகமுடியாத அளவு நெருக்கமாக இருந்த அந்த குடிசைப்பகுதியில் மின்சாரம் இல்லாமல் மின் விசிறி இல்லாமல் அவர்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்று எண்ணிப்பார்த்தால் அவர்களுடைய வாழ்க்கை நமக்கு புரியும். நம் மாநிலத்தில் பெரும்பாலான இடங்களில் மூன்று மணி நேரம் மின் வெட்டு நடைமுறையில் இருந்து வந்தது. அதற்கே நமக்கு எத்தனை கோவம். வடமாநிலங்களில் பதினாறு மணி நேரம் மின் வெட்டு நடைமுறையில் இருக்கிறது என்று செய்தித்தாள் ஒன்றில் படித்து அதிர்ந்து போனேன். மின் வெட்டை மூன்று மணி நேரமே நம்மால் தாங்கமுடியவில்லை அவர்கள் பதினாறு மணி நேரம் எப்படித்தான் தாங்குகிறார்களோ, அங்கு எப்படி தான் நிறுவனங்கள் இயங்குகின்றனவோ என்று எத்தனை பேர் சிந்தித்திருப்பார்கள் என்று தெரியவில்லை. தான் சுகமாக வாழ வேண்டும் என்பது தான் இப்போது உள்ள பெரும்பாலானவர்களின் எண்ணமாக இருக்கிறது. இது தவறு என்று கூறமுடியாது. என்றாலும் மற்றவர்களையும் பற்றி சிந்திப்பதே மனித தன்மையாகும். என்றாலும் மனிதத்தன்மை இல்லாமல் மின் வெட்டுக்கான காரணத்தை ஆளுங்கட்சி எதிர்கட்சி மீதும் எதிர்கட்சி ஆளுங்கட்சி மீதும் தூக்கிப்போட்டுக்கொண்டு தான் இருக்கின்றன. எப்படியோ இந்த மின் வெட்டு என்பது பாமரர்களின் வாழ்க்கையை அனைவருக்கும் எடுத்துக்காட்டியிருக்கும் பாமரர்களின் வாழ்க்கையை அனைவரையும் மூன்று மணி நேரமாவது வாழ வைத்திருக்கும்.

என் அருமை மின் வெட்டுக்கு நன்றி.

முதலில் மனிதானாய் இருப்போம்

மதங்கள் பல உண்டு. இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம், புத்தம், ஜைனம் ஆகியன நமக்கு தெரிந்தவை. ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு கொள்கையைகொண்டிருக்கிறது. மற்ற மதத்தின் கொள்கையைப்பற்றி நாம் அவதூறு பேசுவது சரி ஆகாது. என்றாலும், மனிதம் என்ற நிலையில் இருந்து என் கருத்துக்களை பதிவு செய்கிறேன். அந்த மதத்தின் பெயரை குறிப்பிட விரும்பவில்லை. அந்த குறிப்பிட்ட மதத்தில் நல்ல கோட்பாடுகள் நிறைய இருக்கின்றன என்பதை முதலில் ஒத்துக்கொள்கிறேன். அந்த மதத்தில் உள்ள கோட்பாடுகளில் சில என் மனதை சுட்டது. அதன் ஆற்றாமைகளை இங்கு விளக்குகிறேன்.
அந்த மதத்தை சார்ந்த பெரும்பாலானவர்கள்,
* இந்துக்களின் கடவுளர்களின் சிலையையோ, படத்தையோ வைத்திருந்தால், அந்த அறைக்குள் வரவே மாட்டார்கள்.
* தீபாவளி, பொங்கல், கோவில் விசேஷம், மொஹரம், ரம்ஜான் என்று சுப தினத்தன்று மற்ற மதத்தை சார்ந்தவர்கள் சமைக்கும் சமையலை உண்ண மாட்டார்கள்.
* மற்ற மதத்தை சார்ந்தவர்களும் தங்கள் வழிபாட்டு தளத்திற்கு வரவேண்டும் என்று விரும்புவார்கள். ஆனால் இவர்கள் மற்ற மதத்தை சார்ந்தவர்கள் வழிபாட்டு தளத்திற்குள் நுழையவே மாட்டார்கள்.
* இவர்கள் மதத்தை பற்றி மற்ற மதத்தினரிடம் நிறைய பேசுவார்கள். ஆனால் மற்ற மதத்தை பற்றி கேட்பது கூட பாவம் என்று நினைப்பார்கள்.
* திரைப்படம் என்பது எல்லோரும் விரும்பி பார்க்கும் ஒரு பொழுதுபோக்கு விஷயம். ஆனால் திரைப்படம் பார்ப்பது பாவம் என்று இந்த மதத்தில் கூறப்பட்டுள்ளதாக கூறுவார்கள்.
* மற்ற மதத்தினரால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களில் மதம் சம்மந்தமான எந்த கட்டுப்பாடும் (பெரும்பாலும்) இருக்காது. ஆனால் இந்த குறிப்பிட்ட மதத்தினரால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ மாணவியர்கள் தங்கள் மதத்தின் கோட்பாடுப்படி தான் நடக்கவேண்டும் என்று விதிமுறை விதித்திருப்பார்கள். உதாரணமாக இந்து பெண்கள் தலையில் பூ வைப்பது வழக்கம். சில மதத்தினாரல் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவிகள் தலையில் பூ வைத்துக்கொண்டு வரக்கூடாது என்று விதிமுறை விதித்திருக்கிறார்கள்.
மதம் என்பது தனி மனிதம் சம்மந்தமான விஷயம். அதை மற்றவர்கள் மீது திணிப்பது எந்த விதத்தில் நியாயம்? மனிதத்திற்கு அடுத்தது தான் மதம். சில மதங்கள் இது போன்ற ஒரு வித தீண்டாமையை பின்பற்றி வருவது மனித குலத்திற்கு ஒரு போதும் நன்மையைத்தராது. முதலில் மனிதானாய் இருப்போம். பின்பு மதத்தை பற்றி சிந்திப்போம்.

ஹைக்கூ

பாலுக்கு அழும் குழந்தை எதிர் இருக்க..,
பகட்டாக நடக்கிறது பாலாபிஷேகம்!

What is a Black Box?

WHAT IS A BLACK BOX ?

Usually painted bright orange to help easy retrieval, a black box is a combination of two devices mounted at the rear of an aircraft not the cockpit, since that is the area normally least affected during air crashes, experts explain.

It is called black box because of the tragic circumstances in which the system is generally retrieved and has nothing to do with the colour of its outer casing.

In aviation parlance, it is actually a loose term used for two crucial pieces of equipment — the digital cockpit voice recorder and the flight data recorder — that give crucial inputs to investigators on the causes of air mishaps.

One device digitally records all conversations inside the cockpit and those with the air traffic controllers, among its other uses, and gives vital clues to the cause of any air disaster.

The other has the history of the aircraft’s flight details, such as acceleration, engine thrust, airspeed, altitude, rudder position, which are also vital for crash probes.

A sturdy system the size of a shoebox, it has a reflective tape on its exterior and can withstand extreme temperatures. It has a solid steel encasing and heat-resistant material to withstand heavy impact and razing fire.

Who hacked your Gmail? Find it!

Gmail gives us a great facility. When you logged in to your gmail account, in the bottom centre of the page, you can see the information of the gmail when and where it was used before. By seeing this, you can find whether any hacker have logged into your gmail before without your knowledge. The information in the centre bottom page of the gmail gives the ipaddress which logged in previously. To find the geographical location, go to www.ip2location.com/free.asp and enter the ipaddress which your gmail page shows. That website will give you the information of country, state, city. Some websites provide the latitude and longitude details too. If you got the latitude and longitude details of the ipaddress, then go to www.wikimapia.com and enter the latitude, longitude values and click search. It will pinpoint the place in the map. So you can find exactly where the hacked your account from.

Is your Mail safe from the hackers?

Is your mail safe from the hackers?

I will say NO if you spend nearly 50% of your time in internet. The reason is, when we use internet more frequently, we’ll go across many websites which says “new user, registration, create a new free account etc etc”. We will also be creating an free account in that website may be for getting some service or to download or to get something. What we’ll do? We’ll mostly use a same password for most of our accounts like system login, mail, banking, websites to avoid forgetting the passwords. We think that this is a safer way. But i’m sure that this is a foolish thing that we do. All websites cannot be trusted. For creating a new user account, they will ask our email id(for sending verification) and to choose a password. What we will be doing is choosing the same password which opens that email id. This data will be sent to that website’s administrator. If that website administrator wishes, he/she can view your email id and the password you’ve chosen. If you’ve given the password of your email in that creating that account, and if the website administrator tries the email and password to open your mail account, imagine the result. You’re being hacked. Trust no one in internet. Use a separate password for every account which shouldn’t have any connection. If my mail have been hacked even though i have my passwords and settings safe, then the hacker may be related to any of the websites i have registered so far. Because, like many people, i had also used the same password for all of my accounts(Not now).

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும்...

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும்
அடக்கமுடியாத ஆத்திரத்தினால்
உங்களால் குமுறிக்கொந்தளிக்க முடிந்தால்
நாம் தோழர்களே!
…………………………………………………………-சே குவேரா
Whenever injustice happens anywhere in this world,
If you are able to revolt against those injustice
Because of your uncontrollable emotions, then
We are FRIENDS!
…………………………………………………………-Che Guevara