Tuesday, July 6, 2010

பாரத் பந்த்

பாரத் பந்த் நேற்று ஒரு வழியாக நடந்து முடிந்தது. பல்வேறு எதிர் கட்சி தலைவர்களும் மக்களுக்காக (?) நேற்று பந்த் நடத்தியதாக சொல்லிக்கொண்டார்கள். ஆனால் அதனால் அவதிப்பட்டது பொதுமக்கள் தான் என்பது வேறு விஷயம். தமிழகத்திலும் பல்வேறு எதிர்கட்சி தலைவர்களும் தொண்டர்களும் ரயில் மறியல், பஸ் மறியல், போராட்டம் ஆர்பாட்டம் செய்ததற்காக கைது செய்து பின்பு விடுவிக்கப்பட்டார்கள். ஆனால் நாம் உற்று கவனிக்கவேண்டிய ஒன்று தமிழகத்தின் முக்கிய எதிர்கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் இருப்பவர் நேற்று என்ன செய்தார் என்பது தான். முக்கிய எதிர்கட்சியின் பொதுச்செயலாளர் நேற்று ஏன் மக்களோடு மக்களாக, தொண்டர்களோடு தொண்டர்களாக வீதிக்கு வந்து ஆர்ப்பாட்டமோ, மறியலோ அல்லது வேறு எதுவுமோ செய்யவில்லை? ஒரு வேலை மற்றவர்களை போல நம்மையும் கைது செய்து விடுவார்கள் என்று பயமா? பெரும்பாலும் எந்த ஒரு போராட்டத்திலும் நேரடியாக கலந்து கொள்ளாத அவர் இப்பொழுது தான் சமீப காலமாக போராட்டம், ஆர்பாட்டம் போன்றவற்றில் கலந்து கொள்ள ஆரம்பித்து இருந்தார். இப்பொழுது அவருக்கு மறுபடியும் பயம் வந்து வீட்டிற்கு உள்ளேயே அடங்கி விட்டார் போலும். கொடநாட்டிலும், போயஸ் தோட்டத்திலும் சொகுசாக வாழ்பவர்களுக்கு நம்முடைய கஷ்டம் என்ன தெரியும்? ஏ.சி அறையில் உட்கார்ந்து கொண்டு அறிக்கை மேல் அறிக்கை விடத்தானே  தெரியும். எதிர்கட்சியைச் சாடுவதால் நான் ஆளும்கட்சியை மெச்சிக்கொண்டவன் என்று எண்ணிக்கொள்ள வேண்டாம். தவறு எங்கு இருந்தாலும் சுட்டிக்காட்ட வேண்டியது நமது கடமை தானே.