Wednesday, June 9, 2010

காருக்குள் விஷ(ய)ம்

காருக்குள் இப்பொழுது பெரும்பாலும் ஏ.சி வைத்திருக்கிறார்கள். எனவே காரின் சன்னல்கள் எப்பொழுதும் மூடியே இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த தகவல் பெரிதும் உதவியாக இருக்கும். காருக்குள் சென்ற உடன் சன்னல்கள் அனைத்தையும் மூடிவிட்டு ஏ.சி போடுவதை தவிர்த்து விடுவது நல்லது. பூட்டிய காருக்குள் பென்சீன் எனப்படும் வாயு இருக்கும். அது விஷத்தன்மயானது. எனவே காருக்குள் சென்ற உடன் இரண்டு நிமிடங்களாவது சன்னல்களை திறந்து வைத்து விட்டு பிறகு மூடிக்கொள்வது உங்களின் உடல் நலனைக்காக்கும். விரும்பத்தகாத நிகழ்வுகளும் ஏற்படாமல் தடுக்கும். இது மருத்துவர்கள் தந்த தகவல்களாக இன்று ஒரு ஏட்டில் படித்தேன். உங்கள் நண்பர்களுக்கும் இந்த தகவளைச்சொல்லுங்கள். உங்களுக்கு இல்லாவிட்டாலும், உங்கள் நண்பருக்கோ அல்லது அவரது நண்பருக்கோ இது பயனுள்ளதாக இருக்கும்.