Monday, May 31, 2010

என் கவிதை – “எழுத்துக்கள்!”

தமிழில் எனக்கு கொஞ்சம் ஆர்வம் உண்டு. நான் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது குறள் வெண்பா இலக்கணத்துக்கு உட்பட்டு 66 குறள்களை எழுதி இருக்கிறேன். அது என் தமிழ் ஆசிரியரால் என் வகுப்பில் பாராட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒன்றிரண்டு கவிதைகளை எழுதி இருக்கிறேன். இப்போது இருப்பவர்கள் குறட்பாக்களை விரும்புவதில்லை. எனவே நான் எழுதிய கவிதைகளில் ஒன்று இங்கு
எழுத்துக்கள்!
எழுத்துக்கள்! இப்பூலோகத்தின்
பொக்கிஷங்கள்!
சொற்போர் செய்ய உதவிய
ஆயுதங்கள்!
பிறப்பிலேயே உடன்பிறக்கும்
சகோதரர்கள்!
பல சேர்ந்தால் உண்டாகும்
சப்தங்கள்!
எவ்விடமும் நிறைந்திருக்கும்
மாயங்கள்!
ஊடலும் கூடலும் தோற்றுவிக்கும்
பிறவிகள்!
மொழி பேச உதவிய
நண்பர்கள்!
இறப்புவரை உடன் வரும்
உறவுகள்!
மொழிக்கு வித்திட்ட
விதைகள்!
“எழுத்து”என்று எழுத உதவிய
எழுத்துக்கள்!
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .- கணேசன்.மு.ரா
.
No Copyright or Copyleft reserved. Copy it as you like. But please don’t use it for money making.