Monday, May 31, 2010

யுத்தம்!

சிரிக்காத குழந்தை!
சிறகடிக்காத பறவை!
இருப்பார்களா என்று தெரிய வில்லை…
யுத்த பூமியில்!
தெரிந்ததெல்லாம்
ரத்தமும் ரத்த சம்மந்தமானது மட்டும் தான் என்பது!
ஆனால் ஒன்று மட்டும் உறுதி
வெல்பவர்களையும் தோற்பவர்களையும் விடுத்து
வாழ்பவர்களே அழிக்கப்படுகின்றனர்!